புதுக்கோட்டை புவனேஸ்வரி கோயிலில் "அஷ்டதசபுஜ மகாலட்சுமி', 18 திருக்கரங்களுடன் அருள்புரிகிறாள். செங்கல்பட்டு படாளம் அருகே அரசர் கோயிலில் வலது காலில் ஆறு விரல்களுடன் "சுந்தர மகாலட்சுமி' வீற்றிருக்கிறாள். ஆந்திர மாநிலம், மங்களகிரி நரசிம்மர் ஆலயத்தில் ஆபரணங்கள் ஏதுமின்றி சாந்த நிலையில் தவக்கோலத்தில் அருள்கிறாள் மகாலட்சுமி! தெலுங்கானா, ஹைதராபாத்தில் உள்ள யாதகிரிகுட்டாவில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியுடன் அருள்புரிகிறாள் ஸ்ரீ மகாலட்சுமி. மும்பை, போரிவிலியை அடுத்துள்ள "வசை' என்னும் இடத்தில் "ஹேதவடே' எனும் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் திறக்கும் மகாலட்சுமி கோயில் உள்ளது. இங்கு, மூலஸ்தானத்தில் ஒரு பாறையே திருமகளாகக் கருதப்படுகிறது.