நிகழ்வுகள்

கும்பகோணம் - திருவாரூர் பேருந்து மார்க்கத்தில் குடவாசல் அருகே உள்ளது சேங்காலிபுரம். இங்கு,  ஸ்ரீ ராமானந்த ப்ரம்மேந்திர சுவாமிகள் திருக்கரங்களினால் ஸ்தாபிக்கப்பட்ட, ஸ்ரீ தத்தாத்ரேயர் சந்நிதி விசேஷமாக

ஆராதனை வைபவம்

கும்பகோணம் - திருவாரூர் பேருந்து மார்க்கத்தில் குடவாசல் அருகே உள்ளது சேங்காலிபுரம். இங்கு,  ஸ்ரீ ராமானந்த ப்ரம்மேந்திர சுவாமிகள் திருக்கரங்களினால் ஸ்தாபிக்கப்பட்ட, ஸ்ரீ தத்தாத்ரேயர் சந்நிதி விசேஷமாக அமைந்துள்ளது. மேலும் சுவாமிகளின் அதிஷ்டானமும் இங்கு உள்ளது. சுவாமிகளின் 51 }ஆவது ஆராதனை, ஜனவரி 19 }ஆம் தேதி வைதீக சடங்குகளுடன் அபிஷேக, ஆராதனைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94872 92481/  04366 260819.

மஹாகும்பாபிஷேகம் 

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கலிங்கியம் கிராமம், அவ்வையார்பாளையத்திலுள்ள அருள்மிகு சஞ்சீவி விநாயகர் சுவாமி ஆலயத்தில் 20.01.2019 அன்று காலை 9.50 மணி முதல் 10.20 மணிக்குள் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறும். முன்னதாக, ஜனவரி 18 மற்றும் 19} ஆம் தேதிகளில் ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 98427 40197.


திருச்சி, ஜான்தோப்பு, பாரதியார் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மாகாளியப்ப சுவாமி ஆலயத்தின் மஹாகும்பாபிஷேக விழா, 21.01.2019, காலை 9.45 மணியளவில் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94422 71481.


தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை ஆத்தனஞ்சேரியில் அருட்ஜோதிபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க வளாகத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா, ஜனவரி 20, 21 } ஆம் தேதிகளில் நடைபெறுகின்றது. 20.01.2019 }இல் சுத்த சன்மார்க்க கருத்தரங்கம், சன்மார்க்க ஊர்வலம், ஆய்வரங்கமும்; 21.01.2019 } இல் 7 திரை நீக்கி முதல் ஜோதி தரிசனம், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்,  7 மாயாதிரைகள்  தத்துவ விளக்கம், 7 திரை நீக்கி  2 மற்றும் 3 }ஆவது ஜோதி தரிசனமும் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 99625 69966/ 96004 85481.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com