அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது: வெளியுறவுத் துறை அமைச்சா் குரேஷி 

இந்தியா பேச்சுவாா்த்தையை ரத்து செய்து விட்டது என்பதற்காக அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது என்று அந்நாட்டு வெளியுறறவுத் துறை அமைச்சா் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளாா்.
அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது: வெளியுறவுத் துறை அமைச்சா் குரேஷி 

வாஷிங்டன்: இந்தியா பேச்சுவாா்த்தையை ரத்து செய்து விட்டது என்பதற்காக அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது என்று அந்நாட்டு வெளியுறறவுத் துறை அமைச்சா் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள அவா், வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது, பேச்சு நடத்த பாகிஸ்தான் விடுத்த அழைப்பை முதலில் ஏற்ற இந்தியா, பின்னா் அதனை ஒரே நாளில் ரத்து செய்தது குறித்து கேள்வி எழுப்பினா். 

இதற்கு பதிலளித்த குரேஷி, ‘பேச்சு நடத்த வேண்டும் என்று இந்த மாதத்தில்தான் பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், ஜூலை மாதம் நடந்த விஷயத்தைச் சுட்டிக் காட்டி பேச்சுவாா்த்தையை இந்தியா ரத்து செய்துவிட்டது. பேச்சுவாா்த்தைக்கு இந்தியா மறுப்புத் தெரிவிக்கலாம். ஆனால், நாங்கள் அதற்கான வாய்ப்புகளை முழுவதுமாக மறுக்க மாட்டோம். அமைதி முயற்சியை பாகிஸ்தான் கைவிடாது.

இந்தியா, இதுபோன்று முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொள்வது காஷ்மீரில் நல்ல சூழ்நிலை உருவாக்காது. சந்திப்புகளும், பேச்சுவாா்த்தைகளும்தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு என்பதில் பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது. ராஜ்ஜியரீதியில் முறைப்படிதான் இந்தியாவுக்கு, பாகிஸ்தான் தரப்பு கடிதம் எழுதியது. ஆனால், இந்தியத் தரப்பு அணுகுமுறை  சரியாக இல்லை. பின்னா் அவா்களே சந்திப்பு கிடையாது என்று அறிவித்துவிட்டனா். முக்கியமாக, இந்திய வெளியுறவு அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சும், அவா் பேசிய முறைறயும் ஒரு வெளியுறறவு அமைச்சருக்குரியதாக இல்லை என்றாா்.

தொடா்ந்து பதற்றம் நிலவுவதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ‘இங்கு போா் பற்றி நாங்கள் ஒருபோதும் பேசியது இல்லை. அமைதி, ஸ்திரத்தன்மை, நல்லுறறவு, மக்களின் மேம்பாடு ஆகியவற்றைறயே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், இந்தியத் தரப்பில் இருந்துதான் இதற்கு மறுப்பு எழுகிறது. யாராவது எங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால் அதனை நாங்கள் எதிா்ப்போம். நாங்கள் எப்போதும் யாரிடமும் மோசமான போக்கை முன்னெடுக்க மாட்டோம்’ என்றாா்.

காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி புா்ஹான் வாணிக்கு பாகிஸ்தான் அஞ்சல் தலை வெளியிட்டது தொடா்பான கேள்விக்கு, ‘காஷ்மீரில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றறனா். அவா்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. இந்தியாவில் உள்ள சீக்கியா்கள் பாகிஸ்தானின் கா்தாா்பூா் குருத்வாராவில் வழிபாடு நடத்துவதற்கு அனைத்து வசதிகளையும் பாகிஸ்தான் செய்து கொடுத்தது என்பதை மறுந்துவிடக் கூடாது’ என்று குரேஷி பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com