சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்: 70 பேர் பலி 

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், பொதுமக்கள் 70 பேர் பலியாகியுள்ள தகவல் வெளிவந்துள்ளது
சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்: 70 பேர் பலி 

டமாஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், பொதுமக்கள் 70 பேர் பலியாகியுள்ள தகவல் வெளிவந்துள்ளது

சிரியாவின் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் அரசுப்படையினரால் ஒடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எஞ்சியுள்ள சிலர் யூப்ரட்டிஸ் நதிக்கரையின் ஓரத்தின் உள்ள மறைவிடங்களில் பதுங்கி வாழ்கின்றனர்.

அவ்வாறு டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக பாகோவ்ஸ் நகரம் உள்ளிட்ட இடங்களில் வசித்துவந்த சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு, தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சிரியாவின் டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், பொதுமக்கள் 70 பேர் பலியாகியுள்ள தகவல் வெளிவந்துள்ளது

அமெரிக்கா தலைமையிலான உள்நாட்டு விமானப்படை செவ்வாயன்று நடத்திய தாக்குதலில், அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாமின் மீது குண்டுகள் விழுந்ததில் பொதுமக்களில் 70 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com