ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.
வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா உள்பட 15 நாடுகள் உறுப்பினராக உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது.
கண்டிக்கத்தக்க இந்தத் தாக்குதலுக்கு நிதியுதவி அளித்தவர்கள், ஏற்பாட்டாளர்கள் ஆகியோரை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்.
இதற்கு, இந்திய அரசுக்கு உரிய ஒத்துழைப்பை உறுப்பு நாடுகள் அளிக்க வேண்டும்.