இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் ராஜ் ஷா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அந்தப் பதவியில் அமர்த்தப்பட்ட முதல் இந்திய - அமெரிக்கரான அவர், தனியார் ஊடகக் குழுமத்தில் இணைவதற்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த ராஜ் ஷா, அதிபர் பதவியை டொனால்ட் டிரம்ப் அமைத்ததில் இருந்தே வெள்ளை மாளிகையில் பணியாற்றி வருகிறார்.