அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற 2 ஆண்டுகளில் டொனால்ட் டிரம்ப், உண்மைக்குப் புறம்பான 8,158 தகவல்களை டிரம்ப் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புள்ளிவிவரங்களை மேற்கொள்காட்டி அந்த நாளிதழ் கூறுகையில், டிரம்ப் தனது ஆட்சிக் காலத்தின் முதலாவது ஆண்டில் சராசரியாக தினமும் 5.9 தவறான தகவல்களை அளித்து வந்ததாகவும், அந்த எண்ணிக்கை இரண்டாவது ஆண்டில் 16.5-ஆக அதிகரித்ததாகவும் தெரிவித்தது. பெரும்பாலும் அகதிகள் விவகாரத்தில்தான் அவர் தவறான தகவல்களை அளித்ததாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.