உலகம்

சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்யத் துடிக்கும் ட்ரம்ப்: இந்தியாவுக்கு 3.6 லட்சம் கோடிக்கு நஷ்டம்? 

DIN

நியூயார்க்: இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருவதால், இந்தியா சுமார் ரூ. 3.6 லட்சம் கோடி வரிச்சலுகைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மதுபானங்கள், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு, இந்தியா 100 முதல் 150 % வரை வரி விதிப்பதால் இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோபம் கொண்டுள்ளார். அதற்கு எதிர்வினையாக இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தையும் அவர் ரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

இருநாடுகள் இடையில் இறக்குமதி, ஏற்றுமதி வரி வேறுபாட்டால் அமெரிக்காவுக்கு பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார். இதையடுத்து இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்பதை அமெரிக்க ரத்து செய்துள்ளது. அத்துடன் இந்தியாவுக்கான பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடு என்ற சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்வோம் என எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக தகுதியை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் சுமார் 5 .6 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கான வரிச்சலுகைகள் ரத்தாக கூடும் அபாயம் இருக்கிறது என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT