எம்.பி.ஏ., படித்து தனியார் வங்கியில் வேலை செய்து வரும் என் மகளுக்கு நிரந்தர பணி அமைய வாய்ப்புண்டா? எத்திசையில் வரன் அமையும்? எப்போது திருமணம் கைகூடும்? செவ்வாய் தோஷம் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
- சுதர்சனம், சென்னை
உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம். ஆறாம் வீடான சர்வீஸ் வீட்டில் லக்னாதிபதி, குடும்பாதிபதிகள் ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார்கள். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் சந்திரபகவானுக்கு கேந்திரம் பெற்று கஜகேசரி யோகத்தைக் கொடுக்கிறார். செவ்வாய்பகவான் சுக பாக்கியாதிபதியாகி சுக ஸ்தானமான விருச்சிக ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை. தற்சமயம் ராகு மகாதசையில் சந்திர புக்தி முடிந்து செவ்வாய் புக்தி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடப்பதால் இந்த காலகட்டத்திற்குள் தென்மேற்கு திசையிலிருந்து படித்த நல்ல பணியில் உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று வசிக்கும் யோகமும் உள்ளது. அந்தஸ்தான உத்தியோகத்தில் இருப்பார்.
பரிகாரம் எதுவும் தேவையில்லை.