என் மகள் அரசுத் தேர்வுகள் எழுதி வருகிறாள். எப்போது அரசாங்க வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற
அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா? எப்போது?
- வாசகி, ஈரோடு
உங்கள் மகளுக்கு சிவராஜயோகம் ஆறாம் வீட்டில் அமைகிறது. அவர்களுடன் தொழில் ஸ்தானாதிபதியும் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அவருக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அவர் எதிர்பார்க்கும் உயரிய அரசுப் பதவிகள் கிடைக்கும். இந்த காலகட்டத்திற்குள் சம அந்தஸ்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.