என் மருமகள் குழந்தை இல்லை என்ற ஏக்கம் காரணமாக அகால மரணம் அடைந்தார். எங்களுக்கு ஒரே மகன். தாரத்தை இழந்த வருத்தத்தில் சரிவர இல்லை. நாங்களும் வயதானவர்கள். எங்களுக்கு வேறு ஆதரவில்லை. என் மகன் பழைய நிலைக்கு எப்போது திரும்புவார்? இரண்டாம் திருமணம் உண்டா? குழந்தை பாக்கியம் உண்டா?
- வாசகி, சென்னை
உங்கள் மகனுக்கு கும்ப லக்னம். களத்திர ஸ்தானாதிபதி அசுப சாரம் பெற்று ருணம், ரோகம், சத்ரு ஸ்தானாதிபதியால் பார்க்கப்படுகிறார். மேலும் அஷ்டம ஸ்தானத்திலும் சுபக்கிரகம் இருப்பதும் குறை. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு சமதோஷமுள்ள பெண் அமைந்து மறுமணம் கைகூடும். குழந்தைபாக்கியம் உண்டு.