எனக்கு அரசுப்பணி எப்போது கிடைக்கும்? வருங்கால வாழ்க்கை நிலை, குழந்தையின் கல்வி எப்படி இருக்கும்?
- வாசகி, உடுமலை
தொழில் ஸ்தானத்தில் அரசு கிரகமான செவ்வாய் பகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றும் திக்பலம் பெற்றும் அமர்ந்திருக்கிறார். லாபாதிபதியான சூரியபகவான் தைரிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான புதபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறார். புத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான் லாப ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைந்து, அவர்கள் இருவரின் பார்வையும் புத்திர ஸ்தானத்தின் மீது படிவதால் உங்கள் குழந்தையும் வாழ்க்கையில் சிறப்பான இடத்தைப் பிடித்து விடுவாள். தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசை நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் தகுதிக்கேற்ற அரசு உத்தியோகம் கிடைக்கும். வருங்காலம் சிறப்பாக அமையும்.