எனக்கு திருமணம் எப்போது நடைபெறும்? நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். வேலையில் முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டு வேலை போன்றவை கிட்டுமா? வாரிசுகள் உண்டா? வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா?
- வாசகர், நங்கநல்லூர்
களத்திர ஸ்தானாதிபதி கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வது விசேடம். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்திலுள்ள ராகுபகவானின் புக்தி நடக்கிறது. இது முடிந்து களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கத் தொடங்கியவுடன் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். லாப ஸ்தானாதிபதியின் தசை நடப்பதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். வெளிநாடு சென்று வசிக்கும் யோகமும் உண்டாகும். புத்திர பாக்கியம் உண்டு. 2020 ஆம் ஆண்டுக்குள் சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.