களத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று இருப்பதாலும் களத்திர ஸ்தானாதிபதிக்கு குருபகவானின் பார்வை இருப்பதாலும் படித்த நல்ல உத்தியோகத்தில் உள்ள பெண் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அமைந்து திருமணம் கைகூடும். தென்கிழக்கு திசையிலிருந்து பெண் அமையும். இந்த காலகட்டத்திற்குள் நல்ல வேலை கிடைக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபடவும்.