அரசுக்கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு, சனி பகவான்கள் வலுவாக இருப்பதால் அரசு உத்தியோகம் கிடைக்கும். களத்திர ஸ்தானாதிபதி நீச்சம் பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது. அவர் லக்ன கேந்திரத்தில் இருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் ஏற்பட்டிருக்கிறபடியால் படித்த உத்தியோகத்திலுள்ள வரன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.