என் மகன் கடந்த 5 வருடங்களாக நிரந்தர வேலை இல்லாமல் அவதிப்படுகிறான். நிரந்தர வேலை எப்போது அமையும்? சொந்த வீடு அமைய வாய்ப்புண்டா? - வாசகர், கோவை

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம். தற்சமயம் தர்மகர்மாதிபதியின் தசை நடக்கத்தொடங்கி சுயபுக்தி முடிந்துவிட்டது.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம். தற்சமயம் தர்மகர்மாதிபதியின் தசை நடக்கத்தொடங்கி சுயபுக்தி முடிந்துவிட்டது. தர்மகர்மாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். லக்னாதிபதி உச்சம் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். அதோடு எழரை நாட்டுச் சனியின் இறுதிப்பகுதி நடக்கிறது. அதனால் உங்கள் மகனைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட எதுவுமில்லை. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு உடல்நலம் மனவளம் இரண்டும் கூடும். நிரந்தர உத்தியோகமும் அமையும். இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு சொந்தவீடு வாங்கும் யோகம் உண்டாகும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com