களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அவர் நவாம்சத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். களத்திர ஸ்தானத்தின் மீதும் குருபகவானின் பார்வை படிகிறது. அவருக்கு அந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் மணவாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபட்டு வரவும்.