செவ்வாய் தோஷமில்லை. சர்ப்ப தோஷமுமில்லை. ராசிக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவான் இருப்பதும் குறையில்லை. தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியின் தசையில் ராகுபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.