உங்களுக்கு மகர லக்னம். கும்ப லக்னம் அல்ல. தற்சமயம் குருமஹா தசையில் கேது புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கும். அதற்குப்பிறகு தொடங்கும் சுக்கிர புக்தி மூன்று வருடம் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் உங்கள் குடும்பத்தில் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து நிம்மதி பூத்துக்குலுங்கும். அடுத்த ஆண்டு உங்களின் மூன்றாவது மகனுக்கு திருமணம் கைகூடும். மற்றபடி குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டாம். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.