எங்கள் வீட்டில் எப்போதும் ஏதோ ஒரு பிரச்னை இருந்துக்கொண்டை இருக்கிறது. என் பெரிய பெண் திருமணமாகி குழந்தை இருக்கிறது. கணவருடன் வாழமுடியாமல் இங்கு இருக்கிறார். மூத்த மகன் திருமணமாகியும் நல்ல நிலையில் இல்லாமல் பின்னர் விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார். மூன்றாவது மகனுக்கு சரியான வரன் அமையாமல் உள்ளது.  எப்போது திருமணம் கைகூடும்? நான் குடியிருக்கும் சொந்த வீட்டை  மாற்றும்படி கூறுகிறார்கள். என்ன செய்வது? - வாசகர், திருப்பூர்

உங்களுக்கு மகர லக்னம். கும்ப லக்னம் அல்ல. தற்சமயம் குருமஹா தசையில் கேது புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கும்.

உங்களுக்கு மகர லக்னம். கும்ப லக்னம் அல்ல. தற்சமயம் குருமஹா தசையில் கேது புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கும். அதற்குப்பிறகு தொடங்கும் சுக்கிர புக்தி மூன்று வருடம் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் உங்கள் குடும்பத்தில் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து நிம்மதி பூத்துக்குலுங்கும். அடுத்த ஆண்டு உங்களின் மூன்றாவது மகனுக்கு திருமணம் கைகூடும். மற்றபடி குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டாம். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com