என் கணவர் சொந்தமாக தொழில் செய்கிறார். இப்போது அதில் சரியான வருமானம் இல்லை. இருவருமே அடிக்கடி நோயினால் வருந்துகிறோம். ஒரு பெண் குழந்தை உள்ளது.  அரசு தேர்வுக்காக படித்து வருகிறேன். அரசு வேலை கிடைக்குமா? அல்லது நானும் என் கணவருடன் சேர்ந்து புதிய தொழில் செய்யலாமா? - வாசகி, வேலூர்

உங்களுக்கு தற்சமயம் உச்சம் பெற்ற பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது.

உங்களுக்கு தற்சமயம் உச்சம் பெற்ற பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. அதனால் அரசு வேலை இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கிடைக்கும். தீவிரமாக பயிற்சி செய்யவும். உங்கள் மகளின் மகனின் ஜாதகப்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப்பிறகு முன்னேற்றம் உண்டாகும். அதனால் சொந்த ஊரிலேயே இருந்து தொழில் செய்யலாம். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com