சிவபெருமானை வழிபடுக எனக்கு அரசு வேலை கிடைக்குமா? - வாசகர், பவானிசாகர்

உங்களுக்கு கடக லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். பூர்வபுண்ணிய, தொழில் ஸ்தானாதிபதி ஏழாம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கிறார்.

உங்களுக்கு கடக லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். பூர்வபுண்ணிய, தொழில் ஸ்தானாதிபதி ஏழாம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கிறார். இதனால் ருசக யோகம் உண்டாகிறது. குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சுயசாரத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற குடும்பாதிபதியான சூரியபகவானையும் புதபகவானையும் ஆட்சி பெற்ற சுக்கிரபகவானையும் பார்வை செய்கிறார். அதோடு லக்னாதிபதியும் இந்த மூன்று கிரகங்களையும் பார்வை செய்கிறார். உங்களுக்கு பௌர்ணமி யோகம், புதஆதித்ய யோகம், மாளவிகா யோகம்,  நீச்சபங்க ராஜயோகம், சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. மேலும் தற்சமயம் குடும்பாதிபதியான சூரியபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் (வங்கி காப்பீடு துறைகளிலும்) வேலை கிடைக்கும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com