உங்களுக்கு தனுர் லக்னம், கடக ராசி. அஷ்டம ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் அமர்ந்து சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து இருக்கும் லக்னாதிபதியான
குருபகவானால் பார்க்கப்படுவது சிறப்பு. இதனால் தீர்க்காயுள் உண்டு. அதோடு இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவான் உச்சம் பெற்று தசையை நடத்த இருப்பதால் செவ்வாய்பகவானின் தசை சிறப்பாக அமையும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.