பூர்வபுண்ணியாதிபதியும் பாக்கியாதிபதியும் லாப ஸ்தானத்தில் இணைந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பு. குருமங்கள யோகம், சிவராஜ யோகம், குருசந்திர யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் தற்சமயம் குருபகவானின் பார்வையில் உள்ள சனிபகவானின் தசை நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு உத்தியோகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும். புத்திர ஸ்தானாதிபதி புத்திர காரகருடன் இணைந்து இருப்பதால் குழந்தைகள் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்கள் கணவருக்கும் எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.