லக்னாதிபதி செவ்வாய்பகவானாகி பூர்வபுண்ணியாதிபதியுடன் களத்திர ஸ்தானத்தில் இணைந்திருப்பது சிறப்பு. தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி தன் ராசிக்கு மறைவு பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது. மற்றபடி அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி அவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும்.