உங்கள் மகனுக்கு தொழில் ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். மேலும் தொழில் ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்து தற்சமயம் தசையை நடத்துகிறார். அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு வெளிநாடு சென்று வேலை செய்யும் பாக்கியம் உண்டாகும். இந்த காலகட்டத்திற்குள் மழலை பாக்கியம் உண்டாகும். அவசரப்பட்டு வேலையை விடக்கூடாது. மற்றபடி உங்கள் கணவருக்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு உடல்நலமும் மனநலமும் சீராகி விடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.