என் கணவர் உடல் சுகமில்லாமல் இருக்கிறார். மனதிற்குள் பயமாக இருக்கிறது என்கிறார். என் மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா? குழந்தைபாக்கியம் எப்போது உண்டாகும்? - வாசகி, திருச்சி

உங்கள் மகனுக்கு தொழில் ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார்.

உங்கள் மகனுக்கு தொழில் ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். மேலும் தொழில் ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்து தற்சமயம் தசையை நடத்துகிறார். அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு வெளிநாடு சென்று வேலை செய்யும் பாக்கியம் உண்டாகும். இந்த காலகட்டத்திற்குள் மழலை பாக்கியம் உண்டாகும். அவசரப்பட்டு வேலையை விடக்கூடாது. மற்றபடி உங்கள் கணவருக்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு உடல்நலமும் மனநலமும் சீராகி விடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com