உங்கள் மைத்துனருக்கு துலாம் லக்னம். களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் தோஷம் அடையாமல் சுப பலத்துடன் இருக்கிறார். தற்சமயம் அஷ்டம ஸ்தானத்தில் லக்னாதிபதியுடன் இணைந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.