நான் பிறந்தது முதல் இன்று வரை பெரிதாய் எவ்வித நன்மையும் நடந்ததில்லை. இனியாவது ஏதேனும் நல்லது நடக்குமா? அரசுத்துறையில் பணி கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்?- வாசகர், திருக்கோவிலூர்

லக்னத்தில் சர்ப்பக்கிரகம் இருந்தாலும் தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானுடன்

லக்னத்தில் சர்ப்பக்கிரகம் இருந்தாலும் தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானுடன் இணைந்து சிவராஜ யோகத்தைக் கொடுப்பது சிறப்பு. களத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று பாக்கியாதிபதி மற்றும் உச்சம் பெற்ற சுகாதிபதியுடன் இணைந்திருக்கிறார். பஞ்சமஹா புருஷயோகங்களில் ஒன்றான சசமஹா யோகமும் உண்டாகிறது. லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் ஜாதகத்திற்கு வலு சேர்க்கிறது. மேலும் லக்னத்திற்கு முன்னும் பின்னும் சுபக்கிரகங்கள் இருப்பது சுபகர்த்தாரி யோகத்தை உண்டாக்குகிறது. அதனால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம், அரசு உத்தியோகம் இரண்டும் கைகூடும். தற்சமயம் உச்சம் பெற்ற சனிபகவானின் தசை நடப்பதால் படிப்படியாக யோக பாக்கியங்கள் கூடிவரும். எதிர்காலம் 
சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com