உங்கள் அன்னை சரியான காலத்தில் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை உங்கள் ஜாதகம் உறுதி செய்கிறது. தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு உங்களுக்கு சிறப்பான அரசு உத்தியோகம் கிடைக்கும். மற்றபடி காகத்தின் மூலம் மூதாதையர்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மை. காகமே உங்கள் அருகில் வந்து உணவு எடுத்துச் செல்வது நன்மை பயக்கும் என்றால் மிகையில்லை. எதிர்காலம் சிறப்பாக அமையும்.