உங்களுக்கு தற்சமயம் சுக ஸ்தானத்திலுள்ள தைரிய ஸ்தானாதிபதியின் தசை நடப்பதால் செய்தொழிலை செய்து கொண்டே ஆன்மிகத்திலும் ஈடுபடலாம். இன்னும் ஐந்தாண்டுகளுக்குப்பிறகு அதாவது 2022 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் தொழிலை மூடிவிட்டு முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடலாம். ஆயுள் காரகரான சனிபகவானை பாக்கியாதிபதியான குருபகவான் பார்வை செய்வதால் தீர்க்காயுள் உண்டு. இறுதிக்காலம் அமைதியாகக் கழியும்.