நான் மளிகை வியாபாரம் செய்கிறேன். திருமணமாகி ஓர் ஆண் குழந்தையும் உள்ளது. மூன்று மாத காலமாகவே வியாபாரம் சொல்லும்படியாக இல்லை. வேலைக்கு செல்லவே விரும்புகிறேன். போட்டித் தேர்வுகளும் எழுதி வருகிறேன். அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? என் குழந்தையின் ஜாதகப்படி எனது நிலையில் மேன்மை உண்டா?- ஜெயச்சந்திரன், துறையூர்

பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அரசு கிரகங்கள் பலமாக அமர்ந்திருக்கிறார்கள். அதோடு தற்சமயம் குருமகா தசையில் சுய புக்தி முடியும் தருவாயில் உள்ளது.

பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அரசு கிரகங்கள் பலமாக அமர்ந்திருக்கிறார்கள். அதோடு தற்சமயம் குருமகா தசையில் சுய புக்தி முடியும் தருவாயில் உள்ளது. தொழில் ஸ்தானத்தை பூர்வபுண்ணியாதிபதியும் லாபாதிபதியும் பார்வை செய்கிறார்கள். இதனால் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உத்தியோகம் அமையும். இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும். உங்கள் மகனுக்கு தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கும் குருபகவானின் தசை நடக்கிறது. குருபகவான் பித்ருகாரகரான சூரியபகவானை சமசப்தமமாகப் பார்வை செய்வதால் சிவராஜ யோகம் உண்டாகிறது. இதனால் தந்தைக்கு நன்மைகள் உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com