என்னுடைய வயது 27. என் கணவர் திருமணம் ஆன புதிதில் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தார். பின்னர் நான் ஊரிலும் அவர் வேலை நிமித்தமாக சென்னையிலும் இருந்தார். எனக்கு வளைகாப்பு முடிந்து என் பெற்றோர் வீட்டில் இருக்கிறேன். பின்னர், எங்களுக்குள் நிறைய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. குழந்தை பிறந்தவுடன் மீண்டும் நான் கணவர் குழந்தையுடன் நல்லபடியாக ஒன்றாக வாழவேண்டும். என் கணவரின் வீட்டார்தான் எங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நான் அரசு உத்தியோகத்திற்கு முயற்சி செய்யலாமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி நீங்கள் உங்கள் கணவர் குழந்தையுடன் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள்
உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி நீங்கள் உங்கள் கணவர் குழந்தையுடன் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் குடும்பமாக இணைந்து விடுவீர்கள். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.