உங்கள் மகனுக்கு லக்ன சந்தியாக வருகிறது. அதாவது கன்னியா லக்னம் முடிந்து துலா லக்னம் தொடங்கும் தருவாயில் பிறந்துள்ளார். அதனால் அவருக்கு துலாம் லக்னம் என்று கொண்டே பார்க்க வேண்டும். களத்திர ஸ்தானாதிபதி குருபகவான்களுடன் இணைந்திருக்கிறார். அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். மற்றபடி இதுவரை நீங்கள் செய்யுள்ள பரிகாரங்கள் சரியானது மற்றும் போதுமானது.