தந்தையை இழந்த எனக்கு 35 வயதில் அரசு வேலை கிடைத்தது. 37 வயதில் மனநிலை பாதிக்கப்பட்டேன். பின்னர் தூக்கம் வருவதற்கான மாத்திரையை கடந்த 15 வருடங்களாக சாப்பிட்டு வருகிறேன். 40 வயதில் எனக்குத் திருமணம் நடந்தது. 4 மாத மூளை வளர்ச்சியற்ற குழந்தை என்பதை அறிந்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில்  கருக்கலைப்பு செய்து விட்டேன். இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த மாத்திரையை சாப்பிட்டு வரவேண்டும்? என் அந்திம காலம் நல்ல படியாக கழியுமா? அடுத்த ஜென்மத்திலாவது புத்திரபாக்கியமுண்டா? - வாசகி, திருவண்

உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். மாங்கல்ய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார்.

உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். மாங்கல்ய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு உங்கள் மன ஆரோக்கியம் சீரடையத் தொடங்கும். தொடர்வதும் லக்ன சுபர்களின் தசைகளாக இருப்பதால் தீர்க்காயுள் உண்டு. இறுதிக்காலம் நல்லபடியாக முடியும். மேற்கூறிய காலகட்டத்திற்குள் புத்திர பாக்கியமும் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com