தற்சமயம் தைரிய ஸ்தானத்தில் லக்ன சுபர்களுடன் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் படிப்படியாக உங்கள் வாழ்க்கையில் இன்னல்கள் மறைந்து நலன்கள் உண்டாகத் தொடங்கும். ஆயுள்காரகர் லாப ஸ்தானத்திலும் ஆயுள் ஸ்தானாதிபதி லக்னத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானின் சாரத்திலும் அமர்ந்திருப்பதால் இறுதிக்காலம் அமைதியாகவே கழியும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.