நான் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். சிறு வயது முதல் இன்று வரை நிறைய இன்னல்கள் அனுபவித்துவிட்டேன். எனது கடைசி காலம் நோய்நொடிகள் ஏதுமின்றி அமைதியாக முடியுமா? இனியும் எனது ஜாதகத்தில் ஏதேனும் யோக பாக்கியங்கள் உள்ளனவா? வஞ்சகர்கள் சூழ்ச்சியால் மிகவும் உடல் நலிவுற்று மன உளைச்சலோடு இருக்கிறேன். இந்த நிலை எப்போது மாறும்? - ஜெகன்நாதன், சென்னை

தற்சமயம் தைரிய ஸ்தானத்தில் லக்ன சுபர்களுடன் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால்

தற்சமயம் தைரிய ஸ்தானத்தில் லக்ன சுபர்களுடன் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் படிப்படியாக உங்கள் வாழ்க்கையில் இன்னல்கள் மறைந்து நலன்கள் உண்டாகத் தொடங்கும். ஆயுள்காரகர் லாப ஸ்தானத்திலும் ஆயுள் ஸ்தானாதிபதி லக்னத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானின் சாரத்திலும் அமர்ந்திருப்பதால் இறுதிக்காலம் அமைதியாகவே கழியும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com