உங்கள் மகளுக்கு மகர லக்னம், கடக ராசி. லக்னத்திலோ, இரண்டாம் வீட்டிலோ, நான்காம் வீட்டிலோ, அல்லது ஐந்தாம் வீட்டிலோ சர்ப்ப கிரகங்கள் இருந்தால் அது சர்ப்ப தோஷ வகையில் அமையும். அயன ஸ்தானத்தில் செவ்வாய், சனிபகவான்கள் இணைந்திருந்தாலும் குருபகவானின் பார்வை படுவதால் தோஷம் குறைகிறது. மற்றபடி தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியான புதபகவானின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம், மணவாழ்க்கை சீராக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.