எனது மகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வரன் பார்த்து வருகிறோம். எப்போது திருமணம் கைகூடும்? வேலை எப்போது கிடைக்கும்? மேலும் எங்கள் மகனின் வேலை மற்றும் திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகர், வந்தவாசி

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம். களத்திர ஸ்தானாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் மறைந்து கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று செவ்வாய்பகவானுடன்

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம். களத்திர ஸ்தானாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் மறைந்து கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று செவ்வாய்பகவானுடன் இணைந்து (குருபகவானுடன் செவ்வாய்பகவான் இணைந்திருப்பதால் செவ்வாய் தோஷம் உண்டாகாது) குருமங்கள யோகமும் உண்டாகிறது. இதனால் அயன ஸ்தானமும் களத்திர ஸ்தானாதிபதியும் சுபபலம் பெற்றிருக்கிறார்கள் என்று கூறலாம். லக்னாதிபதி நீச்சம் பெற்று உச்சம் பெற்றுள்ள பூர்வபுண்ணிய அயன ஸ்தானாதிபதியுடன் இணைந்திருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தையும் பெறுகிறார். தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. அதனால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல வேலையில் உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். அரசு உத்தியோகமும் கிடைக்கும். பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com