உங்களுக்கு சிம்ம லக்னம். லக்னாதிபதியும் ஆயுள்காரகரும் ஆட்சி பெற்றிருக்கிறார்கள். பூர்வபுண்ணியாதிபதியும் பாக்கியாதிபதியும் தைரிய ஸ்தானத்தில் இணைந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கிறார்கள். தற்சமயம் பலம் பெற்றுள்ள சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. அதனால் இறுதிக்காலம் அமைதியாகக் கழியும். குழந்தைகளும் இறுதிவரை ஆதரவாக இருப்பார்கள். பிரதி தினமும் "'நமசிவாய'' என்று ஜபித்து வரவும்.