உங்களுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி. தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் திக் பலம் பெற்று அமர்ந்திருக்கும் சனி பகவானின் தசை நடக்கிறது. குருபகவானும் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்து வழக்கு முடிவுக்கு வரும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.