உங்கள் பேரனுக்கு மகர லக்னம், தனுசு ராசி. தற்சமயம் விரய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக லாபாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு அவருக்கு படிப்பில் நாட்டம் கூடும். சனிபகவான் லக்னாதிபதியாக இருப்பதால் ஏழரை நாட்டுச்சனியால் பாதிப்பு ஏற்படாது. படித்து முடித்தவுடன் வேலை கிடைத்துவிடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.