உங்கள் இரண்டாம் மகனுக்கு உத்தியோகம் பார்ப்பதே சிறப்பாகும். சொந்தத் தொழில் செய்வது நலம் பயக்காது. மேலாண்மைத் துறையில் மேற்படிப்பு உண்டு. தனியார் துறையில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பார். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.