எங்கள் மகன் மருமகள் ஜாதகங்களின்படி அவர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடத்தொடங்கும். தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவானின் தசை நடக்கிறது. லாபஸ்தானமும் அதிபலம் பெற்றுள்ளது. இதனால் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகம் உண்டாகும். அரசு உத்தியோகத்தைவிட தனியார் துறையிலேயே சிறப்பான வளர்ச்சி அடைவார். பொருளாதார நிலையும் மேன்மையாகவே அமையும். உங்கள் மருமகளுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு படிப்புக்கேற்ற அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.