ஜோதிட கேள்வி பதில்கள்
நான் எப்போதும் மன துடிப்புடனும் குழப்பத்துடனும் இருக்கிறேன். இதற்கு பரிகாரம் உண்டா? எப்போது உடல்நிலை, மனநிலை சரியாகும்? - வாசகர், திருவல்லிக்கேணி
உங்களுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்து சுகஸ்தானத்தில் அமர்ந்திருக்கும்
உங்களுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்து சுகஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியால் பார்க்கப்படுவதால் முழுமையான சந்திர மங்களயோகம் உண்டாகிறது. சூரியபகவானும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். தற்சமயம் புதபகவானின் தசையில் சந்திரபகவானின் புக்தி நடக்கிறது. தொடர்வதும் செவ்வாய்பகவானின் புக்தியாக அமைகிறது. அடுத்த ஆண்டு ஐனவரி மாதத்திற்குப்பிறகு உங்கள் மனதில் உள்ள குழப்பம் பயம் மறைந்து தெளிவு பிறக்கும். கவலைப்பட எதுவுமில்லை. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.