உங்களுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி. சர்ப்பதோஷம் உள்ளதால் திருமணம் நடக்காது என்று கூற முடியாது. களத்திர ஸ்தானாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். தற்சமயம் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தகுதியான பெண் உங்கள் இனத்திலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.