இந்திய இரு சக்கர வாகனத் துறையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 3.5 சதவீதம் அதிகரித்து ரூ. 914.04 கோடியாக உள்ளது என்று அறிவித்தது.
மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்திருப்பது: 2017-2018 நிதி ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 8,612.91 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் பெற்ற வருவாயைவிட இது 7.52 சதவீதம் அதிகமாகும். நிகர லாபமாக ரூ. 914.04 கோடியை நிறுவனம் ஈட்டியது. கடந்த ஆண்டைவிட இது 3.5 சதவீதம் கூடுதலாகும்.
முதல் காலாண்டில் வாகன விற்பனை எண்ணிக்கை 18,53,647 ஆக இருந்தது. கடந்த ஆண்டு விற்பனையான 17,45,389 வாகனங்களுடன் ஒப்பிடும்போது, தற்போது 6.2 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்தது.