முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை விறுவிறு!

உயர்மதிப்பு கரன்ஸி வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக சென்ற பிப்ரவரியிலும் விறுவிறுப்படைந்துள்ளது.
முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை விறுவிறு!

உயர்மதிப்பு கரன்ஸி வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக சென்ற பிப்ரவரியிலும் விறுவிறுப்படைந்துள்ளது.
கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகியின் உள்நாட்டு விற்பனை பிப்ரவரியில் 1,20,735-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 1,08,115 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 11.7 சதவீத வளர்ச்சியாகும்.
குறிப்பாக இந்நிறுவனத்தின், ஸ்விஃப்ட், எஸ்டிலோ, டிசையர், பலேனோ வகை கார் விற்பனை 9.4 சதவீதம் உயர்ந்து 47,002-ஆக இருந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான மாருதி சுஸுகியின் ’பிரெஸ்ஸா' வகை கார் விற்பனை மிக குறுகிய காலத்துக்குள் 1 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் கார் விற்பனை 52 சதவீதம் அதிகரித்து 8,338-ஆகவும், டொயோட்டா கிர்லோஸ்கர் கார் விற்பனை 11.93 சதவீதம் உயர்ந்து 11,543-ஆகவும் காணப்பட்டது.
அதேபோன்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனோ இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை 26.8 சதவீதம் வளர்ச்சி கண்டு 11,198-ஆகவும், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனை 12 சதவீதம் உயர்ந்து 12,272-ஆகவும் இருந்தன.
இவை தவிர, ஹோண்டா மற்றும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனங்களின் கார் விற்பனை முறையே 9.44 சதவீதம் (14,249 கார்கள்), 4 சதவீதம் (42,327 கார்கள்) அதிகரித்தன.
நிஸான் மோட்டார் இந்தியாவின் கார் விற்பனை 24.86 சதவீதம் வளர்ச்சியடைந்து 4,807-ஆகவும், பஜாஜ் ஆட்டோ வாகன விற்பனை 2,72,719 என்ற எண்ணிக்கையிலிருந்து சற்று அதிகரித்து 2,73,513-ஆகவும் இருந்தன.
அதே சமயம், சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற பிப்ரவரி மாதத்தில் 3.64 சதவீதம் சரிவடைந்து 2,11,470-ஆக இருந்தது.
இரு சக்கர வாகன தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனையும் 4.75 சதவீதம் சரிந்து 5,24,766-ஆக இருந்தது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை 41,438 என்ற எண்ணிக்கையிலிருந்து 2.26 சதவீதம் குறைந்து 40,414-ஆக காணப்பட்டது.
நடப்பு ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மோட்டார் வாகனத் துறையின் விற்பனை வளர்ச்சிக்கு சாதகமான போக்கு நிலவியது.
கிராமப்புறங்களில் வாகனங்களுக்கான தேவை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக இனி வரும் மாதங்களில் சிறிய வகை வர்த்தக வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (ஆட்டோ பிரிவு) பிரவீண் ஷா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com