ரூ.1,315 கோடி திரட்டியது பஞ்சாப் நேஷனல் வங்கி

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.1,315.33 கோடியை திரட்டியது.

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.1,315.33 கோடியை திரட்டியது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
துணை நிறுவனமான பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸில் கொண்டிருந்த 98,15,860 பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. கோரிக்கை அடிப்படையிலான முறையில் (ஓஎஃப்எஸ்) இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த பங்கு விற்பனை மூலம் ரூ.1,315.33 கோடி திரட்டப்பட்டது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com