ஹீரோ மோட்டோகார்ப்பின் 3 புதிய பைக்குகள் அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 3 புதிய பைக்குகளை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 3 புதிய பைக்குகளை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உலகளாவிய தயாரிப்புகள் திட்டமிடல் பிரிவு தலைவர் மாலோ லீ மாஸன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
100-125சிசி பிரிவில் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் நிறுவனம் இந்த மூன்று தயாரிப்புகளை இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. 
அதன்படி, 125சிசி சூப்பர் ஸ்ப்ளெண்டர், 110சிசி பாஸன் ப்ரோ, 110சிசி பாஸன் எக்ஸ்ப்ரோ ஆகிய மூன்று மாடல்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்புதிய பைக்குகள் அதிநவீன வடிவமைப்பு, அதிக சக்தி உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது.
அடுத்த மாதம் முதல் இந்த புதிய தயாரிப்புகளின் விற்பனை அடுத்தடுத்து தொடங்கவுள்ளது. இப்புதிய பைக்குகள் விநியோக மையங்களில் விற்பனைக்கு வரும்போது அதன் விலைகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com