பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) புதிய செயல் இயக்குநராக கே. சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக கே. சுவாமிநாதனை மத்திய அரசு நியமித்து அறிவிக்கை வெளியிட்டது. அவர் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி முறைப்படி அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என ஐ.ஓ.பி. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.