புதிய பிரீமியம் வருவாயில் எல்.ஐ.சி.யின் தென் மண்டலப் பிரிவு முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து எல்.ஐ.சி. நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டில் புதிய பிரீமியம் மூலம் ரூ.3,300 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், டிசம்பருடன் முடிவடைந்த கால அளவில் புதிய பிரீமியம் மூலம் ரூ.3,320 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
முழு நிதி ஆண்டுக்கான இலக்கு ஒன்பது மாதங்களில் விஞ்சப்படுவது எல்.ஐ.சி. வரலாற்றில் இதுவே முதல்முறை. எல்.ஐ.சி.யின் எட்டு மண்டலங்களுள், தென் மண்டலம் இந்த சாதனையைப் புரிந்துள்ளது என்றார் அவர்.
எல்.ஐ.சி.யின் தென் மண்டலப் பிரிவானது, தமிழ்நாடு (8 கோட்டங்கள்), கேரளம் (5 கோட்டங்கள்) மற்றும் புதுச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கியது.