காதி & கிராமத் தொழில் வாரியத்தின் (கே.வி.ஐ.சி.) பொருள்கள் விற்பனை சென்ற டிசம்பரில் 9.25% அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வாரியத்தின் தலைவர் வி.கே. சக்úஸனா வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
நாடு முழுவதும் கே.வி.ஐ.சி.க்கு 7,100 விற்பனையகங்கள் உள்ளன. இந்த விற்பனையகங்களில் பொருள்கள் விற்பனை சென்ற டிசம்பரில் 9.25 சதவீதம் அதிகரித்தது. ரூ.500 ரூ.1,000 கரன்ஸிகள் வாபஸ் பெறுவது குறித்த மத்திய அரசின் அறிவிப்பையடுத்து முதல் 2-3 தினங்களில் மட்டுமே விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டதையடுத்து விற்பனை பாதிப்புக்குள்ளாகவில்லை.
ரூ.2,000-க்கும் அதிகமாக பொருள்கள் வாங்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
கே.வி.ஐ.சி.யும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கு கூடுதலாக 1 சதவீத தள்ளுபடி சலுகையை வழங்கியது.
கடந்த ஒன்றரை மாதங்களாக ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கே.வி.ஐ.சி. சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.